tamilnadu

img

தீண்டாமைக்குக் காரணமே இட ஒதுக்கீடுதான் பாஜக எம்எல்ஏ கண்டுபிடித்திருக்கிறார்

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ரொஹினியா தொகுதி பாஜகஎம்எல்ஏ-வாக இருப்பவர், சுரேந்திரா நாராயண் சிங். இஸ்லாமியர்களை “50 மனைவிகளை மணமுடித்து 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை “நடன மங்கை”என்றும் மிகவும் தரம் தாழ்ந்து பேசி கண்டனங்களுக்கு உள்ளானவர். இந்நிலையில்தான், “எஸ்.சி., எஸ்.டி., வன் கொடுமை தடுப்புச் சட்டம்இருப்பதால்தான் தீண் டாமை இருக்கிறது” என்று தற்போது பேசியுள்ளார்.மேலும், “இந்தச் சட்டத்தை நீக்கி விட்டால் தீண் டாமை என்பதே இருக்காது” என்றும், “இடஒதுக்கீட்டு முறைதான் சாதியத்தை இன்னும்உயிர்ப்புடன் வைத்திருக்கிறது” என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமையும் இருந்ததால்தான் இடஒதுக்கீடும், தீண்டாமை - வன்கொடுமை தடுப்புச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஆனால், பாஜகஎம்எல்ஏ சுரேந்திரா சிங், அப்படியே தலைகீழாக மாற்றிப் பேசியுள்ளார். 

;